ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் நீங்கள் ஏகாதசி அன்று மிக எளிதாக ஜபிக்கக்கூடிய பெருமாளின் அழகிய தமிழ் மந்திரம் இதோ உங்களுக்காக.
மந்திரம் :
“ஓம் நமோ நாராயணாயா”
பெருமாள் தமிழ் மந்திரம்:
“அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்
திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”