ஐயனார் மந்திரம்:
ஓம் அரிகர புத்திராய,
புத்திர லாபாய
சத்துரு விநாசகனாய
மத கஜ வாகனாய
பூத நாதாய அய்யனார் சுவாமியே நமக!
அய்யனாரை வழிபடும் சமயத்தில் இந்த மந்திரத்தை குறைந்தது 9 முறை ஜபித்து வழிபடலாம். கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பலர் தங்கள் நிலத்தில் சிறிய அய்யனார் கோவில் அமைத்து அவர்களே அனைத்து வழிபாடுகளையும் நடத்துவது வழக்கம். அது போன்ற சமயங்களில் இந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் அய்யனாரின் பரிபூரண அருள் கிடைக்கும்.