சாய் பாபா மந்திரம்:
ஓம் ஸ்ரீ சாய் பக்த ரக்ஷாய் நமஹ
சாய் பாபாவுக்குரிய இந்த மந்திரத்தை தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 108 முறை ஜெபிக்கலாம். அல்லது தினமும் உங்களால் முடிந்தபோதெல்லாம் இம்மந்திரத்தை 1008 முறை உரு ஜெபிப்பது சிறப்பானதாகும். மேலும் சாய் பாபாவுக்குரிய வியாழக்கிழமைகளில் காலையிலோ அல்லது மாலையிலோ, வீட்டில் பாபாவின் படத்திற்கு வாசனை மிக்க மலர்களை சூட்டி, கற்கண்டுகள் அல்லது முந்திரிப்பருப்புகளை நிவேதித்து வணங்க உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எவ்வகையான பிரச்சனைகளும் அந்த சாய் நாதனின் அருளால் நீங்கும். எப்போதும் ஒரு தெய்வீக பாதுகாப்பு இருப்பதை உணர்வீர்கள்.